தற்போதைய செய்திகள்

உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா வழக்கு - இரு மருத்துவர்களிடம் தீவிர விசாரணை

தந்தி டிவி

உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா வழக்கு .. இரு மருத்துவர்களிடம் தீவிர விசாரணை - வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்த போலீசார்

தவறான சிகிச்சையால் கால் பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த வழக்கு குறித்து இரு மருத்துவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

கல்லூரி மாணவியும் கால்பந்தாட்ட வீராங்கனையுமான பிரியா, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரு மருத்துவர்களிடமும் தனித்தனியாக விசாரணை குழு சுமார் 2 மணி நேரமாக விசாரணை நடத்தியது. மாணவி பிரியா, சிகிச்சைக்கு வந்தது முதல், இறப்பு வரை என்னென்ன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

இதற்கு, இரு மருத்துவர்களும் அளித்த வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.

இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் எனவும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட செவிலியர்கள் மற்றும் மீதமுள்ள மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு