• உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ராம்சமுஜ் யாதவ் என்பவருடன் நாரை நட்பாக பழகி வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
• மாலிக் கிராமத்தை சேர்ந்த ராம்சமுஜ் என்பவர் நிலத்தில் வேலை பார்த்து வந்தபோது, பசியில் வாடிய நாரைக்கு உணவளித்துள்ளார்.
• இதனைத் தொடர்ந்து அங்கிருந்து சென்ற நாரை, மறுநாள் மீண்டும் ராம்சமுஜை காண வந்துள்ளது.
• இது வழக்கமான நிலையில், ராம்சமுஜ் உடன் நாரை மகிழ்ச்சியாக விளையாடும் வீடியோ இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
• இதேபோன்றதொரு சம்பவத்தில் நாரை உடன் நட்பாக பழகிய ஆரிஃப் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அரசியலானது குறிப்பிடத்தக்கது...