தற்போதைய செய்திகள்

பணிக்கு லீவ் எடுத்த தீயணைப்பு நிலைய காவலர்..நண்பர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

தந்தி டிவி

சென்னை தியாகராய நகர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை காவலராக பணியாற்றிய லோகன், மேற்கு மாம்பலம் பகுதியில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி இருந்தார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு விடுப்பு எடுத்து சொந்த ஊருக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்று பணிக்கு சொல்லாமல் இருந்ததால் சக நண்பர்கள் அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டதில் அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்த போது லோகன், தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.பின்னர், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி