தற்போதைய செய்திகள்

கம்பி மத்தாப்பு தொழிற்சாலையில் மின்னல் பாய்ந்து விபத்து - சிவகாசியில் பரபரப்பு

தந்தி டிவி

சிவகாசி அருகே மின்னல் தாக்கியதில், கம்பி மத்தாப்பு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. பழனி ஆண்டவர் புரம் காலனியை சேர்ந்த ரவி என்பவர், ஆண்டியாபுரம் கிராமத்தில் கம்பி மத்தாப்பு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். நிர்வாக காரணங்களால் கடந்த மாதங்களாக தொழிற்சாலை பூட்டப்பட்டிருந்த நிலையில், சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது. இதில், கம்பி மத்தாப்பு பதுக்கி வைக்கப்பட்ட அறையை மின்னல் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயணைப்புதுறையினர் தீயை அனைத்தனர். தொழிற்சாலை பூட்டப்பட்டிருந்ததால், உயிர்சேதம் ஏதும் ஏற்படாத நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை