தற்போதைய செய்திகள்

கம்பி மத்தாப்பு தொழிற்சாலையில் மின்னல் பாய்ந்து விபத்து - சிவகாசியில் பரபரப்பு

தந்தி டிவி

சிவகாசி அருகே மின்னல் தாக்கியதில், கம்பி மத்தாப்பு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. பழனி ஆண்டவர் புரம் காலனியை சேர்ந்த ரவி என்பவர், ஆண்டியாபுரம் கிராமத்தில் கம்பி மத்தாப்பு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். நிர்வாக காரணங்களால் கடந்த மாதங்களாக தொழிற்சாலை பூட்டப்பட்டிருந்த நிலையில், சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது. இதில், கம்பி மத்தாப்பு பதுக்கி வைக்கப்பட்ட அறையை மின்னல் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயணைப்புதுறையினர் தீயை அனைத்தனர். தொழிற்சாலை பூட்டப்பட்டிருந்ததால், உயிர்சேதம் ஏதும் ஏற்படாத நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்