தற்போதைய செய்திகள்

மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனம் - பூட்டை உடைத்து அதிரடி காட்டிய போலீசார்

தந்தி டிவி

தர்ம‌புரி மாவட்டத்தில் நிதி மோசடி புகாரில், பூட்டிக்கிடந்த நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தர்மபுரியை சேர்ந்த தனியார் சிட் பண்ட் (chits fund) நிறுவனம் பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்த‌து. இது தொடர்பாக நிதி நிறுவனத்தின் பங்குதார‌ர்கள் 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பென்னாகரம் சாலையில் உள்ள அந்நிறுவனத்தில் சோதனை இடச்சென்ற போலீசார், அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ஆய்வு செய்தனர். அதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்