நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாத நிலையில், கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் சாம்சனுக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தனர். கத்தாரில் இருந்து சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை, ரசிகர்கள் மைதானத்தில் காண்பித்தனர். இதனிடையே, இந்திய அணியின் பயிற்சியாளர் லக்ஷ்மனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.