தற்போதைய செய்திகள்

"ஆசை வார்த்தை கூறி ஏமாற்றம்" - "ஐபிஎஸ் அதிகாரி மீது பெண் பாலியல் புகார்"

தந்தி டிவி

தமிழ்நாடு காவலர் பயிற்சி மையத்தின் துணை இயக்குனராக உள்ள ஐபிஎஸ் அதிகாரி பி. செல்வ நாகரத்தினம், மீது சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், செல்வ நாகரத்தினம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து அறிக்கை தாக்கல் செய்தது.இதையடுத்து, 30 நாட்களில் விளக்கமளிக்க கடந்த டிசம்பர் மாதம் டிஜிபி சார்பில் செல்வ நாகரத்தினத்திற்கு உத்தரவிட்டிருந்தது.இதனை எதிர்த்து நாகசெல்வ நாகரத்தினம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் நிராகரித்தது. இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, சரவணன் அமர்வு, டிபிஜி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை