தற்போதைய செய்திகள்

"ஆசை வார்த்தை கூறி ஏமாற்றம்" - "ஐபிஎஸ் அதிகாரி மீது பெண் பாலியல் புகார்"

தந்தி டிவி

தமிழ்நாடு காவலர் பயிற்சி மையத்தின் துணை இயக்குனராக உள்ள ஐபிஎஸ் அதிகாரி பி. செல்வ நாகரத்தினம், மீது சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், செல்வ நாகரத்தினம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து அறிக்கை தாக்கல் செய்தது.இதையடுத்து, 30 நாட்களில் விளக்கமளிக்க கடந்த டிசம்பர் மாதம் டிஜிபி சார்பில் செல்வ நாகரத்தினத்திற்கு உத்தரவிட்டிருந்தது.இதனை எதிர்த்து நாகசெல்வ நாகரத்தினம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் நிராகரித்தது. இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, சரவணன் அமர்வு, டிபிஜி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

DMK | TVK | CM Vijay | ``முதல்வர் விஜய் அவர்களே..’’ - அரசியல் பரபரப்புக்கு நடுவே ஸ்டாலின் அறிக்கை

PM Modi in Andhra | மூவேந்தர்களாக பிரமாண்ட பவனி - ஒரே வேனில் மோடி, சந்திரபாபு, பவன் கல்யாண்

Senthil Balaji | இரண்டு நாட்களாக வராத நிலையில் இன்று செந்தில் பாலாஜி திடீர் முடிவு

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்