தற்போதைய செய்திகள்

கர்ப்பிணி மருமகளை சிசுவோடு எரித்து துடிக்க துடிக்க கொன்ற மாமனார்.. பீதியில் ஆசிட் குடித்த மகன்

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியை சேர்ந்த விஜய் பிரகாஷ், அபிராமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இருவருக்கும் ஒன்றரை வயதில் குழந்தை உள்ள நிலையில், 5 மாத கர்ப்பிணியாக இருந்த அபிராமி, குடும்ப பிரச்சினை காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து, தற்கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், அபிராமியின் மாமனார் கலியமூர்த்தியை கைது செய்தனர்.

இதனிடையே, குடும்ப பிரச்சினையில் மாமனார் கலியமூர்த்தி, அபிராமி மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்த‌து தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக அபிராமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், தற்கொலை வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீசார், அபிராமியின் கணவர் விஜய் பிரகாஷையும் கைது செய்தனர்.

இதனிடையே, கைதான விஜய் பிரகாஷ் காவல் நிலைய கழிவறையில் ஆஷிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை