தற்போதைய செய்திகள்

கர்ப்பிணி மருமகளை சிசுவோடு எரித்து துடிக்க துடிக்க கொன்ற மாமனார்.. பீதியில் ஆசிட் குடித்த மகன்

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியை சேர்ந்த விஜய் பிரகாஷ், அபிராமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இருவருக்கும் ஒன்றரை வயதில் குழந்தை உள்ள நிலையில், 5 மாத கர்ப்பிணியாக இருந்த அபிராமி, குடும்ப பிரச்சினை காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து, தற்கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், அபிராமியின் மாமனார் கலியமூர்த்தியை கைது செய்தனர்.

இதனிடையே, குடும்ப பிரச்சினையில் மாமனார் கலியமூர்த்தி, அபிராமி மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்த‌து தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக அபிராமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், தற்கொலை வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீசார், அபிராமியின் கணவர் விஜய் பிரகாஷையும் கைது செய்தனர்.

இதனிடையே, கைதான விஜய் பிரகாஷ் காவல் நிலைய கழிவறையில் ஆஷிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை