தற்போதைய செய்திகள்

பிளாஸ்டிக் பை-க்காக கத்தியால் குத்தி தலையை சுக்குநூறாக்கி கொன்ற கொடூரன்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே, முன்விரோதம் காரணமாக, நபரை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, காவல்நிலையத்தில் விவசாயி சரண் அடைந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

சூளகிரி பகுதியை சேர்ந்த அப்பையப்பா என்பவருக்கும், கிருஷ்ணப்பா என்பவருக்கும் இடையே, விளைநிலத்தில் பிளாஸ்டிக் பைகள் திருடுபோனது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதற்காக கிருஷ்ணப்பாவை பழி தீர்க்க அப்பையப்பா திட்டம் தீட்டியுள்ளார்.

அப்போது, தெருக்கூத்து பார்த்திருந்த கிருஷ்ணப்பாவை, தனியாக பேச வேண்டும் என அழைத்துச் சென்ற அப்பையப்பா, மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தியதுடன், தலையில் கல்லைப் போட்டக் கொலை செய்தார்.

தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

இதனை அறிந்த அப்பையப்பா, காவல்நிலையத்தில் சென்று சரணடைந்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி