தற்போதைய செய்திகள்

விபத்தில் பேருந்திற்கு அடியில் சிக்கிய விவசாயி உடல் கருகி பலி

தந்தி டிவி
• அரூர் அருகே சாலை விபத்தில் தனியார் பேருந்திற்கு அடியில் இரு சக்கர வாகனத்துடன் சிக்கிய விவசாயி, வாகனத்தில் பற்றிய திடீர் தீயில் உடல் கருகி உயிரிழந்தார். • தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டியைச் சேர்ந்த விவசாயி துரைசாமி, தனது இரு சக்கர வாகனத்தில் அரூர் நோக்கி சென்றுள்ளார். சின்னாங்குப்பம் அருகே சென்ற துரைசாமி, பின்னால் பேருந்து வருவதை கவனிக்காமல் திடீரென திரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது தனியார் பேருந்து மோதியதில், இருசக்கர வாகனத்துடன் துரைசாமி பேருந்து அடியில் சிக்கியுள்ளார். தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் திடீரென தீ பற்றிய நிலையில், விபத்தில் படுகாயமடைந்த துரைசாமி, நிகழ்விடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்படுத்தியதை தொடர்ந்து, உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி