தற்போதைய செய்திகள்

"Police -ஆ இல்லை Polic -ஆ"... கடையில் புகுந்து சோதனை நடத்திய நபர் - ID கார்டு -ஆல் சிக்கிய பரிதாபம்

தந்தி டிவி

மதுரை மேலூர் அடுத்த மேலவளவை சேர்ந்தவர் சரவணன். இவர், நத்தம் அடுத்த செந்துறையிலுள்ள கடைகளில் மதுவிலக்கு போலீசார் என கூறி கடைகளில் சோதனை நடத்தியுள்ளார். கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்வதாக கூறி கடை உரிமையாளர்களிடம் பணம் கேட்டிருக்கிறார். இதில், சந்தேகமடைந்த கடை உரிமையாளர்கள், அவரிடம் அடையாள அட்டை கேட்கவே, போலியாக தயாரித்து வைத்திருந்த அடையாள அட்டையை சரவணன் காண்பித்துள்ளார். அடையாள அட்டையில் எழுத்துப் பிழைகள் இருந்ததால், சந்தேகத்தை உறுதி செய்த மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சரவணனை பிடித்து நடத்திய விசாரணையில், அவர் போலீஸ் வேடத்தில் மோசடி செய்ய முயன்றது தெரியவர, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை