தற்போதைய செய்திகள்

போலி வரவு புத்தகம்..! 1 கோடி ரூபாய் பணத்தை சுருட்டிய அஞ்சலக அதிகாரி... தஞ்சாவூரில் அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

கும்பகோணம் அருகே உடையாளூர் கிராமத்தில் உள்ள அஞ்சலகத்தில் வினோத் குமார் என்பவர் 7 ஆண்டுகளாக, அஞ்சலக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த பலர், அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் செலுத்த வேண்டிய பணத்தை கொடுத்துள்ளனர். ஆனால், வினோத் குமார் மக்களிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு, போலி புத்தகத்தில் வரவு வைத்து கொடுத்துள்ளார். இந்நிலையில், அஞ்சலகம் சென்று வரவு வைக்கப்பட்ட புத்தகத்தை காண்பித்த போது, பணம் செலுத்தியவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். இது குறித்து உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏறத்தாழ சுமார் 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ