தற்போதைய செய்திகள்

முன்னாள் அமைச்சர்கள் ஊழல் புகார்கள்.. ஆளுநர் - அமித் ஷா சந்திப்பின் புதிய பின்னணி

தந்தி டிவி

டெல்லி சென்றுள்ள ஆளுநர் ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்து பேசினார். தமிழக அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. முன்னதாக, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்வதாக ஆளுநர் ரவி கடந்த வாரம் அறிவித்திருந்தார். பின்னர், மத்திய உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, பதவி நீக்கத்தை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், செந்தில்பாலாஜி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, அமித்ஷாவுடன் ஆளுநர் ரவி ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனர். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி ஆகியோர் தொடர்பான கோப்புகள் குறித்து அமைச்சர் ரகுபதி கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை