தற்போதைய செய்திகள்

ஆளுநருக்கு அதிரடியாக ட்வீட் மூலம் பதிலடி கொடுத்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்

தந்தி டிவி

நிலுவையில் உள்ள மசோதாக்கள் பற்றி, தமிழக ஆளுநர் அளித்த விளக்கத்திற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்து டிவீட் செய்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் சிலவற்றிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் இதுவரை அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். நிலுவையில்வைத்துள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், அவை இறந்து விட்டன் என்பதே இதற்கு அர்த்தம் என்று தமிழக ஆளுநர் ஆ.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார். நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க, அல்லது அதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து, திருப்பி அனுப்ப மட்டுமே ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக ப.சிதம்பரம் டிவீட் செய்துள்ளார். ஒரு காரணமும் சொல்லாமல், ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மறுத்தால், ஜனனாயகம் அங்கு செத்து விட்டது என்று அர்த்தம் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். இரண்டாவது முறையாக ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அரசியல்சட்டம் சொல்வதாக கூறியுள்ளார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?