தற்போதைய செய்திகள்

குழந்தை பிறந்தநாளுக்கு வாங்கிய கேக்.. கேக்கை வெட்டிய போது அதிர்ச்சி... வாட்ஸ் ஆப்பில் பிரபல பேக்கரி மீது புகார்

தந்தி டிவி
• கோபிசெட்டிப்பாளையத்தில் குழந்தையின் பிறந்தநாளுக்காக வாங்கிச் சென்ற கேக், கெட்டுப்போனதாக புகாரளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. • கோபிச்செட்டிபாளையம் அருகே அவ்வையார்பாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். • இவர் தனது குழந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு, கோபி அண்ணா பாலம் அருகேயுள்ள பிரபல பேக்கரியில் 750 ரூபாய் மதிப்புள்ள கேக் ஒன்றை வாங்கிச் சென்றுள்ளார். • இதையடுத்து, கேக்கை வெட்டி பாதி சாப்பிட்ட நிலையில் அது கெட்டுபோனது எனத் தெரிய வந்துள்ளது. • கெட்டுப்போன கேக்கை புகைப்படம் எடுத்து உணவு பாதுகாப்பு துறைக்கு வாட்ஸ் ஆப் மூலம் புகாரளித்துள்ளார். • இந்த சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் கேட்ட போது அவர் வாங்கிச் சென்ற கேக் கெட்டுப் போனது எனவும், கேக் வாங்கிய ரசீது பெற்ற பின் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"