தற்போதைய செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்... வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நிறைவு

தந்தி டிவி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை தயார் செய்து வருகிறது.

ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் வைக்கப்பட்டுள்ள ஆயிரத்து 408 வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்களூருவில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சரி செய்யும் பணியில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக ஈடுபட்டனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி செய்யப்பட்ட பின்பு இன்று தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த கிழக்கு சட்டமன்ற தேர்தலில் 286 வாக்குப்பதிவு இயந்திரங்களும் 286 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் 310 சரிபார்ப்பு இயந்திரங்களும் என 882 இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டன.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு