தற்போதைய செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்... வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நிறைவு

தந்தி டிவி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை தயார் செய்து வருகிறது.

ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் வைக்கப்பட்டுள்ள ஆயிரத்து 408 வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்களூருவில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சரி செய்யும் பணியில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக ஈடுபட்டனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி செய்யப்பட்ட பின்பு இன்று தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த கிழக்கு சட்டமன்ற தேர்தலில் 286 வாக்குப்பதிவு இயந்திரங்களும் 286 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் 310 சரிபார்ப்பு இயந்திரங்களும் என 882 இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை