தற்போதைய செய்திகள்

கால் அழுகிய நோயாளியை சாலையில் வீசிய அரசு ராஜாஜி மருத்துவமனை ஊழியர்கள் - மதுரையில் அதிர்ச்சி

தந்தி டிவி

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே, பிரகாஷ் என்ற ஆதரவற்ற கூலித்தொழிலாளி காலில் பெரிய புண்ணுடன் சாலையோரம் கிடந்தார். இவரை மீட்ட ரெட்கிராஸ் அமைப்பினர், அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் இவரை மீண்டும் சாலையில் வீசிச் சென்றனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அப்பகுதியினர் நோயாளியை மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், பணியின்போது அலட்சியமாக இருந்ததாக 2 பயிற்சி மருத்துவர்கள், செவிலியர், மருத்துவமனை ஊழியர் ஆகிய 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து பாலரெங்காபுரம் அரசு மருத்துவமனைக்கு பணியிடமாற்றம் செய்து, மருத்துவமனை டீன் ரத்னவேல் நடவடிக்கை எடுத்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை