தற்போதைய செய்திகள்

கரும்பு துண்டுகளுக்காக லாரியை வழிமறித்த யானை - லாரியை துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சம்

தந்தி டிவி

கரும்பு துண்டுகளுக்காக லாரியை வழிமறித்த யானை - லாரியை பின்தொடர்ந்து துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சம்

தாளவாடி அருகே கரும்பு துண்டுகளுக்காக லாரியை, யானை துரத்திய சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், தாளவாடியில் இருந்து இன்று காலை கரும்பு ஏற்றிச் சென்ற லாரியை, பண்ணாரி வனப் பகுதி அருகே சாலையோரம் நின்றிருந்த காட்டு யானை வழி மறித்தது. அச்சமடைந்த லாரி ஓட்டுனர், லாரியை நிறுத்தினார்.

இதைத் தொடர்ந்து லாரியில் இருந்த கரும்புகளை காட்டு யானை தனது தும்பிக்கையால் பறித்தது. ஓட்டுநர் மெதுவாக லாரியை இயக்கி புறப்பட்டவுடன், கரும்புக்காக லாரியை துரத்தியபடி சிறிதுதூரம் சென்ற காட்டு யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்