தற்போதைய செய்திகள்

கரும்பு துண்டுகளுக்காக லாரியை வழிமறித்த யானை - லாரியை துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சம்

தந்தி டிவி

கரும்பு துண்டுகளுக்காக லாரியை வழிமறித்த யானை - லாரியை பின்தொடர்ந்து துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சம்

தாளவாடி அருகே கரும்பு துண்டுகளுக்காக லாரியை, யானை துரத்திய சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், தாளவாடியில் இருந்து இன்று காலை கரும்பு ஏற்றிச் சென்ற லாரியை, பண்ணாரி வனப் பகுதி அருகே சாலையோரம் நின்றிருந்த காட்டு யானை வழி மறித்தது. அச்சமடைந்த லாரி ஓட்டுனர், லாரியை நிறுத்தினார்.

இதைத் தொடர்ந்து லாரியில் இருந்த கரும்புகளை காட்டு யானை தனது தும்பிக்கையால் பறித்தது. ஓட்டுநர் மெதுவாக லாரியை இயக்கி புறப்பட்டவுடன், கரும்புக்காக லாரியை துரத்தியபடி சிறிதுதூரம் சென்ற காட்டு யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்