தற்போதைய செய்திகள்

கரும்பு துண்டுகளுக்காக லாரியை வழிமறித்த யானை - லாரியை துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சம்

தந்தி டிவி

கரும்பு துண்டுகளுக்காக லாரியை வழிமறித்த யானை - லாரியை பின்தொடர்ந்து துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சம்

தாளவாடி அருகே கரும்பு துண்டுகளுக்காக லாரியை, யானை துரத்திய சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், தாளவாடியில் இருந்து இன்று காலை கரும்பு ஏற்றிச் சென்ற லாரியை, பண்ணாரி வனப் பகுதி அருகே சாலையோரம் நின்றிருந்த காட்டு யானை வழி மறித்தது. அச்சமடைந்த லாரி ஓட்டுனர், லாரியை நிறுத்தினார்.

இதைத் தொடர்ந்து லாரியில் இருந்த கரும்புகளை காட்டு யானை தனது தும்பிக்கையால் பறித்தது. ஓட்டுநர் மெதுவாக லாரியை இயக்கி புறப்பட்டவுடன், கரும்புக்காக லாரியை துரத்தியபடி சிறிதுதூரம் சென்ற காட்டு யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ