தற்போதைய செய்திகள்

எழும்பூர் டூ கடற்கரை ரயில் பாதை - ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்

தந்தி டிவி

சென்னை எழும்பூர் முதல் சென்னை கடற்கரை வரை நான்காவது ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றி அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4 புள்ளி 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு 4-வது புதிய ரயில்பாதை அமைக்க மத்திய பட்ஜெட்டில் 96 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த பணிகள் காரணமாக, வரும் ஜூலை முதல் 7 மாதங்களுக்கு சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரை பறக்கும் ரயில் சேவையை ரத்து செய்யவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருந்த‌து.

புறநகர் மின்சார ரயில் சேவை பகுதி அளவு ரத்து செய்யப்பட்டால், பொதுமக்களுக்கு இடையூறுகள் அதிகம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

எனவே, பறக்கும் ரயில் சேவையை தற்காலிகமாக ரத்து செய்வதை தவிர்த்திடும் வகையில், நான்காவது வழிபாதை திட்டத்தை மாற்றியமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை