தற்போதைய செய்திகள்

எழும்பூர் டூ கடற்கரை ரயில் பாதை - ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்

தந்தி டிவி

சென்னை எழும்பூர் முதல் சென்னை கடற்கரை வரை நான்காவது ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றி அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4 புள்ளி 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு 4-வது புதிய ரயில்பாதை அமைக்க மத்திய பட்ஜெட்டில் 96 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த பணிகள் காரணமாக, வரும் ஜூலை முதல் 7 மாதங்களுக்கு சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரை பறக்கும் ரயில் சேவையை ரத்து செய்யவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருந்த‌து.

புறநகர் மின்சார ரயில் சேவை பகுதி அளவு ரத்து செய்யப்பட்டால், பொதுமக்களுக்கு இடையூறுகள் அதிகம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

எனவே, பறக்கும் ரயில் சேவையை தற்காலிகமாக ரத்து செய்வதை தவிர்த்திடும் வகையில், நான்காவது வழிபாதை திட்டத்தை மாற்றியமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ