சென்னையில் நடைபெற்ற பரத நாட்டியம் அரங்கேற்ற நிகழ்ச்சியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டு களித்தார். அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கத்தின் மகள்களின் பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி, சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பரதநாட்டிய நிகழ்ச்சியை கண்டு களித்தார்.