தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடி குறித்து இ-மெயில்... டெல்லியில் இருந்து விரைந்து வந்த 10 அதிகாரிகள் - தஞ்சை இளைஞரிடம் தீவிர விசாரணை

தந்தி டிவி

தஞ்சாவூரில் பிரதமர் குறித்தான அவதூறு கருத்துகளை மின்னஞ்சலில் அனுப்பிய ஆராய்ச்சி மாணவனிடம் மூன்றாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சையை சேர்ந்தவர், 35 வயதான ஆராய்ச்சி மாணவர் ஜேம்ஸ் ராஜா. இவர் பிரதமர் குறித்தான அவதூறு கருத்துகளை, பிரதமர் அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் அனுப்பியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், டெல்லியில் இருந்து 10க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் தஞ்சைக்கு விரைந்து இளைஞரை கைது செய்தனர். இதில், மத்திய அரசுக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் இளைஞரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், தற்போது ரகசிய இடத்தில் வைத்து இளைஞரிடம் மூன்றாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

LPG Cylinder Tamilnadu | ``தமிழகத்தில் அடுத்த 20 நாட்களுக்கு மட்டுமே’’ - பரபரப்பு தகவல்

karur CBI Investigation | கரூர் CBI விசாரணை - வெளிப்படையாக அறிவித்த செந்தில்பாலாஜி

NCERT | Supreme Court | ஒட்டுமொத்த இந்திய நீதித்துறையிடமும் பொது மன்னிப்பு கோரப்பட்டது

Today Gold Rate | மாறியது தங்கத்தின் நிலவரம்

Iranwar ``ஒன்னுமே மிஞ்சாது பாக்குறீங்களா.. காட்டவா’’ - ஈரானுக்கு எதிராக அதிஉச்ச முடிவெடுத்த டிரம்ப்