தற்போதைய செய்திகள்

குடிநீர் தட்டுப்பாட்டால் பெரும் அவதி... சாலை மறியலில் இறங்கிய பொதுமக்கள்

தந்தி டிவி

திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கபட்டது. திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை பகுதியில் சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து புகாரளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டும் அப்பகுதியினர், இன்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து சுமார் இரண்டு மணி நேரம் பாதிக்கபட்டது. இதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்