தற்போதைய செய்திகள்

மதுபோதையில் அரசுப் பேருந்தை அதிவேகத்தில் தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர் - காரைக்காலில் பரபரப்பு

தந்தி டிவி

காரைக்காலில் இருந்து ஈரோட்டிற்கு தமிழக அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. பேருந்தை, ஓட்டுநர் ராஜராஜன் அதிவேகமாக இயக்கியதால் கூச்சலிட்ட பயணிகள் நிறுத்துமாறு கூறியுள்ளனர். எனினும் நிறுத்தாமல் ஓட்டியதால், பயணிகள் அச்சமடைந்தனர். திருநள்ளாறு புறவழிச் சாலையில் செல்ல வேண்டிய பேருந்து, வளைவில் திரும்பாமல், விபத்து ஏற்படுத்துவது போல் சென்றது. பேருந்தை நிறுத்தக்கோரி பயணிகள் சத்தம் போட்டதை கண்ட வாகன ஓட்டிகள், பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை இறக்கி விசாரித்தனர். அப்போது ஓட்டுநர் ராஜராஜன் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து திருநள்ளாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்து, ஓட்டுனர் மற்றும் நடத்துனரை காவலர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர், பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை