தற்போதைய செய்திகள்

மதுபோதையில் அரசுப் பேருந்தை அதிவேகத்தில் தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர் - காரைக்காலில் பரபரப்பு

தந்தி டிவி

காரைக்காலில் இருந்து ஈரோட்டிற்கு தமிழக அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. பேருந்தை, ஓட்டுநர் ராஜராஜன் அதிவேகமாக இயக்கியதால் கூச்சலிட்ட பயணிகள் நிறுத்துமாறு கூறியுள்ளனர். எனினும் நிறுத்தாமல் ஓட்டியதால், பயணிகள் அச்சமடைந்தனர். திருநள்ளாறு புறவழிச் சாலையில் செல்ல வேண்டிய பேருந்து, வளைவில் திரும்பாமல், விபத்து ஏற்படுத்துவது போல் சென்றது. பேருந்தை நிறுத்தக்கோரி பயணிகள் சத்தம் போட்டதை கண்ட வாகன ஓட்டிகள், பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை இறக்கி விசாரித்தனர். அப்போது ஓட்டுநர் ராஜராஜன் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து திருநள்ளாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்து, ஓட்டுனர் மற்றும் நடத்துனரை காவலர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர், பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு