தற்போதைய செய்திகள்

மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள்... வசூல் வேட்டையில் சென்னை போக்குவரத்து காவல்துறை - 2 வாரங்களில் மட்டும் எவ்வளவு அபராதம் வசூல் தெரியுமா?

தந்தி டிவி

மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் வசூலான அபராதத் தொகை குறித்து, சென்னை பெருநகர காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த அபராதத்தொகை வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 வாரங்களில் மட்டும், ஆயிரத்து 628 மதுபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு, ஒரு கோடியே 68 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அபராதம் செலுத்தாத 319 பேரின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்ய, நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்