தற்போதைய செய்திகள்

மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள்... வசூல் வேட்டையில் சென்னை போக்குவரத்து காவல்துறை - 2 வாரங்களில் மட்டும் எவ்வளவு அபராதம் வசூல் தெரியுமா?

தந்தி டிவி

மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் வசூலான அபராதத் தொகை குறித்து, சென்னை பெருநகர காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த அபராதத்தொகை வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 வாரங்களில் மட்டும், ஆயிரத்து 628 மதுபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு, ஒரு கோடியே 68 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அபராதம் செலுத்தாத 319 பேரின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்ய, நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்