தற்போதைய செய்திகள்

குடிநீர் வசதி, கழிப்பறைகள், ஓய்வறை.. சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

தந்தி டிவி

தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் நிறுவனங்களை பதிவு செய்வது தொடர்பான சட்ட திருத்தங்கள், அமலுக்கு வந்துள்ளன.

10 அல்லது அதற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு, விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் பதிவு சான்றிதழ் வழங்க வழிவகை செய்யும் வகையில், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதேபோல் கடை அல்லது நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, சுகாதாரமான குடிநீர் வசதி, போதிய எண்ணிக்கையிலான கழிப்பறைகள், ஓய்வறை உள்ளிட்டவற்றை ஏற்படுத்த வேண்டுமெனவும் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இச்சட்ட திருத்தங்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்ததையடுத்து, இரு சட்ட திருத்தங்களும் அமலுக்கு வந்துள்ளது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே