தற்போதைய செய்திகள்

கெட்டுப்போன உணவில் அன்னதானம்..அதிகாரிகளின் அதிரடி ரெய்டு..!

தந்தி டிவி

திருநள்ளாறு சனிஸ்வரர் கோயில் அருகே விற்பனை செய்யப்படும் காரைக்கால் அடுத்துள்ள திருநள்ளாறு சனிபகவான் கோயில் அருகில், விற்பனை செய்யப்பட்ட கெட்டுப்போன உணவு பறிமுதல் செய்யப்பட்டது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், அங்குள்ள யாசகர்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம். இதற்காக திருநள்ளாறு நளன்குளம் பகுதியில் சிலர் உணவு விற்பனை செய்து வருகின்றனர். இந்த உணவு தரமற்ற இருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதன்பேரில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது துர்நாற்றம் வீசிய கெட்டுப்போன உணவு விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சில வியாபாரிகள் கெட்டுப்போன உணவுகளை தூக்கி எறிந்து ஓடினர். இதையடுத்து கெட்டுப்போன உணவை பறிமுதல் செய்து அழித்தனர். 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ