தற்போதைய செய்திகள்

"உயிரையே வைத்து வளர்த்த நாய்" - தன்னைவிட்டு பிரிந்த சோகம் - உரிமையாளர் செய்த நெகிழ்ச்சி செயல்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் பவானியில் ஆசையாக வளர்த்து வந்த நாய் உயிரிழந்ததால், அதற்கு இரங்கல் தெரிவித்து நாயின் உரிமையாளர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

குருப்ப நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ். டீக்கடை உரிமையாளரான இவர் வீடு மற்றும் கடைக்கு பாதுகாப்பாக "கருப்பா" என்ற நாயை வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி கருப்பா காணாமல் போனது... இதுகுறித்து விஜயராஜ் கருப்பாவின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றி தேடி வந்தார். இதற்கிடையே பவானி ஆற்றுப்பகுதியில் கருப்பா இறந்த நிலையில் கிடப்பதாக தகவல் தெரிந்துள்ளது. இதைத் தொடர்ந்து கருப்பாவை கண்ணீருடன் இறுதிச் சடங்கு செய்து அடக்கம் செய்த விஜயராஜ், பவானி முழுவதும் அதற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்