தற்போதைய செய்திகள்

"உயிரையே வைத்து வளர்த்த நாய்" - தன்னைவிட்டு பிரிந்த சோகம் - உரிமையாளர் செய்த நெகிழ்ச்சி செயல்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் பவானியில் ஆசையாக வளர்த்து வந்த நாய் உயிரிழந்ததால், அதற்கு இரங்கல் தெரிவித்து நாயின் உரிமையாளர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

குருப்ப நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ். டீக்கடை உரிமையாளரான இவர் வீடு மற்றும் கடைக்கு பாதுகாப்பாக "கருப்பா" என்ற நாயை வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி கருப்பா காணாமல் போனது... இதுகுறித்து விஜயராஜ் கருப்பாவின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றி தேடி வந்தார். இதற்கிடையே பவானி ஆற்றுப்பகுதியில் கருப்பா இறந்த நிலையில் கிடப்பதாக தகவல் தெரிந்துள்ளது. இதைத் தொடர்ந்து கருப்பாவை கண்ணீருடன் இறுதிச் சடங்கு செய்து அடக்கம் செய்த விஜயராஜ், பவானி முழுவதும் அதற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்