தற்போதைய செய்திகள்

நாய் வளர்ப்பில் ஏற்பட்ட தகராறு - உச்சகட்ட மோதலில் கத்திக் குத்து-கல்பாக்கத்தில் பரபரப்பு

தந்தி டிவி

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வசித்து வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரித்தேஷ் ரஞ்சன், தனது வீட்டில் இரண்டு உயர்ரக நாய்களை வளர்த்து வந்துள்ளார்.

வளர்ப்பு நாய்களால் குடியிருப்பு வளாகத்தில் சுகாதார சீர்க்கேடு ஏற்படுவதாக கூறி, அங்கு வசிப்போர் ரித்தேஷிடம் முறையிட்டுள்ளனர்.

அதற்கு ரித்தேஷ் தகராறில் ஈடுபட்டதுடன், அவதூறு வார்த்தைகளை பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, குடியிருப்பு வாசிகள், ரித்தேஷ் வேலைப்பார்க்கும் அணுமின் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதனால் ஆத்திரமடைந்த ரித்தேஷ், தன் மீது புகார் அளித்த முத்துகுமாரிடம் தகராறு செய்துள்ளார்.

அப்போது ஏற்பட்ட கைகலப்பில் தன்னிடம் இருந்த கத்தியால், முத்துகுமாரின் மார்பு மற்றும் முழங்காலில் ரித்தேஷ் குத்தியுள்ளார்.

அதில் காயமடைந்த முத்துகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் கத்தியால் குத்திய ரித்தேஷை கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை