தற்போதைய செய்திகள்

மூக்கில் அறுவை சிகிச்சைக்கு மயக்க ஊசி செலுத்திய மருத்துவர்கள் - அடுத்து நடந்த அதிர்ச்சி

தந்தி டிவி

கடலூரில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ், மூக்கில் வளர்ந்துள்ள சதையை அறுவை சிகிச்சை செய்வதற்காக கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போது, மருத்துவர்கள் அளித்த மயக்க ஊசியால் கோவிந்தராஜின் உடல் நிலை மிகவும் மோசமானதாக கூறப்படுகிறது.

உடனே மருத்துவர்கள் அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரைத்துள்ளனர்.

ஆனால், அந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே கோவிந்த ராஜ் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் கவனக்குறைவே உயிரிழப்பிற்கு காரணம் என கோவிந்தராஜின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால், முன்னெச்சரிக்கையாக மருத்துவமனை வளாகத்தை சுற்றி பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு