தற்போதைய செய்திகள்

"இதை உடனே செய்யுங்கள்" - தமிழக அரசுக்கு ஈ.பி.எஸ். வலியுறுத்தல் | Edappadi Palanismy | ADMK

தந்தி டிவி

கோடை மழை மற்றும் சூறைக்காற்றில் சேதமடைந்த பயிர்களுக்கு, அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டத்தில், சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு போன்ற பயிர் வகைகளும், பலா, தேக்கு போன்ற மர வகைகளும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சேதமடைந்த முருங்கை மரங்களையும், பிற மாவட்டங்களில் சூறைக்காற்றில் சேதமடைந்த பயிர்களையும் அதிகாரிகளை அனுப்பி கணக்கெடுத்து, விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணத்தை வழங்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்