வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு சம்மன். சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி அகியோர் ஜனவரி 10ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக 2015ஆம் ஆண்டில் சிபிஐ பதிவு செய்த வழக்கு. வருமானத்திற்கு அதிகமாக ரூ.5.53 கோடிக்கு சொத்துக்களை குவித்துள்ளதாக கடந்த மாதம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.