தற்போதைய செய்திகள்

திமுக பிரமுகரை சரமாரியாக வெட்டி கொலை... நீதிமன்றத்தில் சரணடைந்த 8 பேர்

தந்தி டிவி

கொல்லம் பட்டறை பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் சரவணன் என்பவர், பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில், இந்திய தேசிய லீக் கட்சி பிரமுகர் அல் ஆசிக் என்பவருக்கும் சரவணனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததும், இதன் காரணமாக சரவணனை கொலை செய்ததும் தெரியவந்தது. இந்நிலையில், அல் ஆசிக் உள்பட எட்டு பேர், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்கள் அனைவரையும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்