தற்போதைய செய்திகள்

பெட்ரோல் பங்க் மேலாளரை செங்கல்லால் கொடூரமாக தாக்கிய திமுக பிரமுகர் - பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

நாமக்கல் அருகே, பெட்ரோல் பங்க் மேலாளரை திமுக பிரமுகர் தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது. ஆரூர் பகுதியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கில், திமுக பிரமுகர் சுப்பையா என்பவர், தனது சகோதரர்களுடன் பெட்ரோல் நிரப்ப வந்தார். ஏடிஎம் கார்டு மூலம் பணம் செலுத்த முயன்ற போது, நெட்வொர்க் வேலை செய்யவில்லை என, பெண் ஊழியர் வெண்ணிலா கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுப்பையா, ஊழியருடன் தகராறில் ஈடுபட்டதுடன், செங்கலை எடுத்து மேலாளர் தியாகராஜனை சரமாரியாக தாக்கினார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில், இருவரை கைது செய்த போலீசார், தலைமறைவான சுப்பையாவை தேடி வருகின்றனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்