தற்போதைய செய்திகள்

போலீசாருக்கு இனிப்பு வழங்கிய காவல் கண்காணிப்பாளர் - தீபாவளி வாழ்த்து தெரிவித்த அதிகாரி

தந்தி டிவி

கன்னியாகுமரியில் தீபாவளி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு, காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத், குடும்பத்துடன் சேர்ந்து இனிப்பு வழங்கி, தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

தீபாவளியை ஒட்டி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்கும் விதமாக கன்னியாகுமரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நாகர்கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் குடும்பத்துடன் வந்து, இனிப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து, வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்த துப்புரவு பணியாளர்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் மாவட்ட கண்காணிப்பாளர் இனிப்புகளை வழங்கினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்