தற்போதைய செய்திகள்

போலீசாருக்கு இனிப்பு வழங்கிய காவல் கண்காணிப்பாளர் - தீபாவளி வாழ்த்து தெரிவித்த அதிகாரி

தந்தி டிவி

கன்னியாகுமரியில் தீபாவளி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு, காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத், குடும்பத்துடன் சேர்ந்து இனிப்பு வழங்கி, தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

தீபாவளியை ஒட்டி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்கும் விதமாக கன்னியாகுமரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நாகர்கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் குடும்பத்துடன் வந்து, இனிப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து, வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்த துப்புரவு பணியாளர்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் மாவட்ட கண்காணிப்பாளர் இனிப்புகளை வழங்கினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ