தற்போதைய செய்திகள்

2 ஆண்டுகளில் 4 முறை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் | வேதனையில் ராமநாதபுரம் மாவட்ட மக்கள்

தந்தி டிவி

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 4 முறை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சுமார் 3 ஆண்டுகாலம் பதவி வகித்த வீரராகவ ராவ் என்பவர், 2 ஆண்டுகளுக்கு முன் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக நியமிக்கப்பட்ட தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எட்டே மாதங்களில் தஞ்சை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அவரை தொடர்ந்து ஆட்சியர்களாக நியமிக்கப்பட்ட சந்திரகாலா, சங்கர்லால் குமாவத் ஆகியோரும் சில மாதங்களிலேயே பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்தநிலையில் தற்போதைய ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸூம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு மாவட்ட ஆட்சியர்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவது அம்மாவட்ட மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியர்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவது மாவட்டத்தில் வளர்ச்சியை பாதிக்கும் என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை