தற்போதைய செய்திகள்

2 ஆண்டுகளில் 4 முறை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் | வேதனையில் ராமநாதபுரம் மாவட்ட மக்கள்

தந்தி டிவி

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 4 முறை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சுமார் 3 ஆண்டுகாலம் பதவி வகித்த வீரராகவ ராவ் என்பவர், 2 ஆண்டுகளுக்கு முன் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக நியமிக்கப்பட்ட தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எட்டே மாதங்களில் தஞ்சை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அவரை தொடர்ந்து ஆட்சியர்களாக நியமிக்கப்பட்ட சந்திரகாலா, சங்கர்லால் குமாவத் ஆகியோரும் சில மாதங்களிலேயே பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்தநிலையில் தற்போதைய ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸூம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு மாவட்ட ஆட்சியர்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவது அம்மாவட்ட மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியர்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவது மாவட்டத்தில் வளர்ச்சியை பாதிக்கும் என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்