தற்போதைய செய்திகள்

ஐயப்பன் கோயில் குறித்து சர்ச்சை பதிவு - எழும்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

ஐயப்பன் கோயில் குறித்து முகநூலில் பதிவிட்ட வழக்கில் பேராசிரியர் சுந்தரவல்லிக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2018-ம் ஆண்டு பம்பை நதிக்கரையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஐயப்ப பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பேராசிரியர் சுந்தரவல்லி தமது முகநூல் பக்கத்தில், ஐயப்பன் கோயில் குறித்தும், சபரிமலைக்கு பெண்கள் செல்வது குறித்தும் பதிவிட்டிருந்தார். இதற்கு எதிராக பேராசிரியர் சுந்தரவல்லி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் கூடுதல் தலைமை நீதிமன்றம், பேராசிரியர் சுந்தரவல்லிக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் அபாரதம் விதித்தது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு