தற்போதைய செய்திகள்

அதிகாரி போட்ட பக்கா பிளான் -கையும் களவுமாய் சிக்கிய நபர்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி
• தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் யோகேஷ். இவரது தலைமையிலான கும்பல், போடி வனப் பகுதியில் இருந்து கருங்காலி மரக்கட்டைகளை வெட்டி கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த சென்னை வனத்துறை மற்றும் பறக்கும்படை அதிகாரிகள், கருங்காலி கட்டைகளை விலைக்கு வாங்கும் வியாபாரிகள் போல் யோகேஷை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர். இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சந்திரன் என்பவரது வீட்டில் கருங்காலி கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், சந்திரனின் பங்களாவிற்கு சென்ற அதிகாரிகள், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கருங்காலி கட்டைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, யோகேஷ் மற்றும் சந்திரனின் கார் ஓட்டுநர் சிவாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட பங்களாவில் இருந்து பழமையான கோவில் கலசங்களையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை