தற்போதைய செய்திகள்

உயிரை பறித்த கணவனின் விளையாட்டு.. திடீரென தடுமாறி நீரில் விழுந்ததால் விபரீதம் - திண்டுக்கல்லில் கோர சம்பவம்

தந்தி டிவி
• திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே மனைவியை மிரட்டுவதற்காக குவாரி தண்ணீரில் குதிப்பது போல் நடித்த கணவர், கால் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • எரியோடு பாண்டியன் நகரைச் சேர்ந்த மகாலட்சுமியும், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அமீரும், காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். • இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ஊருக்கு வெளியே உள்ள குவாரிக்கு துணி துவைக்க சென்றபோது, இருவருக்கும் இடைய சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. • அப்போது, தண்ணீருக்குள் குதிக்கப் போவதாக விளையாட்டாக மிரட்டிய அமீர், திடீரென கால் தடுமாறி தண்ணீருக்குள் தவறி விழுந்தார். • கணவர் விளையாட்டாக செய்கிறார் என நினைத்துக் கொண்டிருந்த மகாலட்சுமி, கணவர் வெகுநேரம் ஆகியும் வெளியே வராததால் கூச்சலிட்டுள்ளார். • அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அருகில் இருந்தவர்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். • சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் இறங்கி, கொடியில் சிக்கி உயிரற்ற நிலையில் இருந்த அமீரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு திண்டுக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?