• பள்ளபட்டியைச் சேர்ந்த தமிழேந்திர சர்க்கார் என்பவர், அம்மையநாயக்கனூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், தனது மகளை விடுவதற்காக மனைவி அஜித்தாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
• பொட்டிசெட்டிபட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, இரும்பு தடுப்பில் மோதி கீழே விழுந்ததுடன், கண்டெய்னர் லாரியில் இருசக்கர வாகனம் சிக்கியது.
• இதில், தமிழேந்திர சர்க்காரின் மனைவி, மகள் காயத்துடன் உயிர் தப்பிய நிலையில், தமிழேந்திர சர்க்காரின் உடல், ஒரு கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, இடுப்புக்கு கீழே பாதி உடல் நசுங்கி சாலையில் கிடந்தது.
• சம்பவ இடத்துக்கு விரைந்த அம்மையநாயக்கனூர் போலீசார், தமிழேந்திர சர்க்காரின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
• மேலும் காயமடைந்த அஜித்தா, மகள் ஜியா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வெப் கேமரா காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.