தர்மபுரி அதியமான் கோட்டையில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கால பைரவர் ஆலயம் உள்ளது. ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் தமிழகம், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்நிலையில் கால பைரவரின் வாகனமாக கருதப்படும் நாய் ஒன்று கோவிலின் கருவறை வரை நேரடியாக சென்று சுவாமியை சுற்று சுற்றி வந்து வழிபடுவது அங்குள்ள பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.