தற்போதைய செய்திகள்

தேவர் ஜெயந்தியில் போஸ்டர் கிழிப்பால் விசிக பிரமுகர் கொலையா?

தந்தி டிவி

தூத்துக்குடியில் வீடு புகுந்து விசிக பிரமுகரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அந்தோணியார்புரத்தை சேர்ந்த மாரிமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உறுப்பினராக உள்ளார். இவர் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த மூன்று பேர் மாரிமுத்துவை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பித்து சென்றனர். தடுக்க முயன்ற மாரிமுத்து மகன் கருணாகரனையும் தாக்கிவிட்டு சென்றனர். காயமடைந்த கருணாகரனை தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதித்து, தென்பாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தேவர் ஜெயந்திக்காக ஒட்டப்பட்ட போஸ்டரை, மாரிமுத்துவின் மகன் கருணாகரன் கிழித்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட முன்பகையால், மாரிமுத்துவை அதே பகுதியை சேர்ந்த முகேஷ், முத்துபாண்டி, முத்துலிங்கம் ஆகியோர் வீட்டிற்கே சென்று வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இவர்கள் மூன்று பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"