தற்போதைய செய்திகள்

"கேஜிஎப் ராக்கி" போல ஆக ஆசை-19 வயது சிறுவன் சீரியல் கில்லராக மாறிய கொடூரம்

தந்தி டிவி

சாகர் மாவட்டத்தில், கடந்த 5 நாட்களில் மட்டும்இரவுக் காவலாளிகள் 4 பேர், கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், வியாழக்கிழமை அன்று, போபால் நகரில் நடந்த 4வது கொலையில் போலீசாருக்கு துப்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து, கொலையாளியை பின் தொடர்ந்த போலீசார், அவனை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

இதுதொடர்பாக அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், 19 வயதான ஷிவ்பிரசாத் துருவ் என தெரியவந்தது.

காவலாளிகளைக் கொன்றதாக வாக்குமூலம் அளித்த அந்த இளைஞர், கேஜிஎப் படத்தில் ராக்கி ஸ்டார் போன்று பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில், கொலைகளை செய்ததாக அலட்சியமாக கூறியது, போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது.

இதனைத் தொடர்ந்து ஷிவ்பிரசாத் துருவ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்