தற்போதைய செய்திகள்

கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு - காவல் ஆய்வாளர் எடுத்த முடிவு - வருத்தம் தெரிவித்த பூசாரி

தந்தி டிவி

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் மாரியம்மன் கோயிலில், பட்டியல் சமூகத்தினரை அனுமதிக்காத விவகாரம் தொடர்பாக, இருதரப்பிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

உப்பிடமங்கலம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில், பட்டியல் சமூகத்தினரை அனுமதிக்க முடியாது என கோயில் பூசாரி பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பான செய்தி தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலையில், கரூர் ஆட்சியர் பிரபுசங்கர், எஸ்.பி., சுந்தரவதனம் உத்தரவின் பேரில், இருதரப்பையும் அழைத்து வெள்ளியணை காவல் ஆய்வாளர் ஓம் பிரகாஷ் விசாரித்தனர். அப்போது, பிரச்னைக்கு காரணமான கோயில் பூசாரி வருத்தம் தெரிவித்ததை அடுத்து, இருதரப்பினர் மத்தியில் சமாதானம் ஏற்பட்டது. 

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு