தற்போதைய செய்திகள்

இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடம்..! பூட்டை உடைத்து உபகரணங்கள், சான்றிதழ்களை தூக்கி சென்ற கான்ட்ராக்ட்டர்... தனி நபரின் வீட்டில் மாணவர்கள் தேர்வு எழுதும் அவலம்

தந்தி டிவி

திருவண்ணாமலை அருகே தலைமை ஆசிரியர் அனுமதியின்றி பள்ளி உபகரணங்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை, அரசு ஒப்பந்ததாரர் எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், அண்டபேட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 20 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கிராமத்தில், 28 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய தொடக்கப்பள்ளி கட்டடம் கட்டுவதற்கு ஒப்பந்தம் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதிய பள்ளி கட்டடம் கட்டுவதற்கு ஒப்பந்தம் பெற்ற அரசு ஒப்பந்ததாரர், தலைமை ஆசிரியரின் அனுமதியின்றி பள்ளியின் பூட்டை உடைத்து, பொருள்கள் மற்றும் மாணவர்கள் சான்றிதழ்களை எடுத்துச் சென்றுவிட்டு, பள்ளி கட்டடத்தை இடிக்கும் பணிகளை தொடங்கியுள்ளார். இதனால், மாணவர்கள் தனி நபரின் வீட்டில் ஆண்டு இறுதித் தேர்வை எழுதி வருகின்றனர். எடுத்துச் சென்ற பொருள்களை உடனடியாக கொடுக்காவிட்டால், போலீசாரிடம் புகாரளிக்கப்படும் என தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை