தற்போதைய செய்திகள்

நிர்பயா வன்கொடுமையின் பத்தாவது ஆண்டு நினைவு நாளான்று, நாடாளுமன்ற அவைக்கு கடிதம் எழுதியுள்ள டெல்லி மகளிர் ஆணையம்

தந்தி டிவி

நிர்பயா வன்கொடுமையின் பத்தாவது ஆண்டு நினைவு நாளான இன்று, நாடாளுமன்ற அவைகளுக்கு கடிதம் எழுதியுள்ள டெல்லி மகளிர் ஆணையம், பெண்களின் பாதுகாப்பு குறித்து விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், தேசிய தலைநகரான டெல்லியில் தினமும் 6 பாலியல் வன்கொடுமை அரங்கேறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 8 மாத குழந்தை முதல் 90 வயது மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை செய்வதாக குறிப்பிட்டதுடன், 17 வயது சிறுமி மீது ஆசிட் வீசப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறி ஆசிட் விற்கப்படுவதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அரசு தவறி விட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என்றும் மகளிர் ஆணையர் சுவாதி வாலிபால் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்