இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், ஸ்பின்னர் தீப்தி சர்மா செய்த ரன் அவுட் பேசுபொருளாகி உள்ளது.
நான்-ஸ்ட்ரைக்கரில் இருந்த இங்கிலாந்து வீராங்கனை சார்லெட் டீன், தீப்தி பந்து வீசுவதற்கு முன்பாகவே கிரீஸை விட்டு வெளியேறினார்.
அப்போது உடனடியாக தீப்தி சர்மா ஸ்டம்பை தாக்கி சார்லெட் டீனை ரன் அவுட் செய்தார்.
ஐசிசியின் புதிய விதிகள் படி தீப்தி சர்மா இந்த ரன் அவுட்டை செய்துள்ளார்.