தற்போதைய செய்திகள்

திடீரென கூட்டம் கூட்டமாக இறந்த வாத்து, கோழிகள் - கேரளாவில் கடுமையான கட்டுப்பாடுகள்

தந்தி டிவி

கேரளாவில் பறவை காய்ச்சல் இருப்பதால் இறைச்சி விற்பனைக்கு தடை உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கோட்டயம் சுற்றுவட்டார பகுதிகளான அற்புதரை, வெச்சூர், நீண்டூர் பகுதிகளில் வாத்துகள் மற்றும் கோழிகள் கூட்டம், கூட்டமாக இறந்தன. அதன் மாதிரிகள் போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட பரிசோதிக்கப்பட்டது. அதில், இறந்த வாத்து மற்றும் கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வாத்து மற்றும் கோழிகளை கொன்று அழிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி 7 ஆயிரத்டுஹ் 400 பறவைகள் அழிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதுடன், கோழி, வாத்து, காடை இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு பகுதிகளில் 10 கிலோ மீட்டர் தூரம் கண்காணிப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்