தற்போதைய செய்திகள்

புதிய கடைகள் கட்டுவதற்காக இடிக்கப்பட்ட தினசரி சந்தை.. போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி சந்தையில், கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தையில் கடைகளை இடித்து விட்டு, 6 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 250 கடைகள் கொண்ட சந்தை கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடைகளை இடிக்க கூடாது என வியாபாரிகள் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், கடைகளை இடிப்பதற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. இதைத் தொடர்ந்து, கடைகளை காலி செய்ய கடந்த 14-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், கடைகளை இடிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் இன்று தொடங்கியது. அப்போது, எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர். பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடைகளை இடிக்கும் பணி நடைபெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்