தற்போதைய செய்திகள்

புதிய கடைகள் கட்டுவதற்காக இடிக்கப்பட்ட தினசரி சந்தை.. போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி சந்தையில், கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தையில் கடைகளை இடித்து விட்டு, 6 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 250 கடைகள் கொண்ட சந்தை கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடைகளை இடிக்க கூடாது என வியாபாரிகள் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், கடைகளை இடிப்பதற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. இதைத் தொடர்ந்து, கடைகளை காலி செய்ய கடந்த 14-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், கடைகளை இடிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் இன்று தொடங்கியது. அப்போது, எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர். பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடைகளை இடிக்கும் பணி நடைபெற்றது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ