கோவையில் குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே கள்ளப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கன்னியப்பன். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணாமாக கன்னியப்பனை அவரது மனைவி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், உறவினர் வீட்டில் வசித்து வந்த மனைவியை பல முறை கன்னியப்பன் அழைத்தும் வராததால் ஆத்திரத்தில் அரிவாளால் மனைவியை வெட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், கன்னியப்பனின் மனைவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, காவல்நிலையத்தில் சரணடைந்த கன்னியப்பன் மீது வழக்குபதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.