தற்போதைய செய்திகள்

இளைஞரை வாட்டிய வயிற்று வலி.. திருமணமான 3 மாதத்தில் பலி

தந்தி டிவி
• கடலூரில் திருமணமான மூன்றே மாதத்தில் குடலிறக்க சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் மீனவர் உதயகுமார். இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில், வெளிநாடு சென்று பணிபுரிய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. • இதற்கான மருத்துவ பரிசோதனையின் போது உதயகுமாருக்கு குடலிறக்க பிரச்னை இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தியுள்ளனர். • இதன்பேரில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை பின்பு தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட உதயகுமார், திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. • இந்நிலையில், இளைஞர் உயிரிழப்புக்கு மருத்துவர்கள் மீது குற்றம்சாட்டி உறவினர்கள் உடலை வாங்க மறுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்