தற்போதைய செய்திகள்

இளைஞரை வாட்டிய வயிற்று வலி.. திருமணமான 3 மாதத்தில் பலி

தந்தி டிவி
• கடலூரில் திருமணமான மூன்றே மாதத்தில் குடலிறக்க சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் மீனவர் உதயகுமார். இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில், வெளிநாடு சென்று பணிபுரிய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. • இதற்கான மருத்துவ பரிசோதனையின் போது உதயகுமாருக்கு குடலிறக்க பிரச்னை இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தியுள்ளனர். • இதன்பேரில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை பின்பு தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட உதயகுமார், திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. • இந்நிலையில், இளைஞர் உயிரிழப்புக்கு மருத்துவர்கள் மீது குற்றம்சாட்டி உறவினர்கள் உடலை வாங்க மறுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"